பரமக்குடி : பரமக்குடி சிவன் மற்றும் முருகன் கோயில்களில் பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நடந்தது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள், பூர்ணாஹூதி நடந்தது. பின், பல்வேறு வகை அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு பைரவர் சந்தன காப்பு அலங்காரத்தில், திரிசூலம் ஏந்தி காட்சியளித்தார். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகளுடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
*இதேபோல் பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயில், செந்தில் ஆண்டவர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.