சென்னை:வட சென்னை மின் நிலையத்தில், 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அத்திபட்டில், மின் வாரியத்திற்கு வட சென்னை என்ற பெயரில் அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்த மின் நிலையத்தின் மூன்றாவது அலகில், பழுது காரணமாக இம்மாதம், 9ம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள முதல் அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக,மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.