வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அமிர்தசரஸ்: பஞ்சாபில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய கூலி தொழிலாளர்கள் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தினக்கூலி ரூ.700 ஆக உயர்த்தப்படும் என ஆம் ஆத்மி நடந்து முடிந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது.
![]()
|
இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்லாயிரகணக்கான விவசாய கூலித்தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இன்று சிங்கூர் நகரில் உள்ள முதல்வர் வீட்டை முற்றுகையிட பேரணி நடத்தினர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் பகவந்த் மான சென்றுள்ள நிலையில் நடந்த போராட்டத்தால் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.