மாட்டு உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம்

Added : டிச 01, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகரில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் அங்கும், இங்கும் சுற்றி திரியும்போதும், ரோட்டில் செல்வோரை முட்டி தள்ளுகிறது. கடந்த வாரம் ஒரு பெண் படுகாயமடைந்தார். இதனால், நகரில் சுற்றும் மாடுகளை பிடிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் மூன்று நாட்களாக ஈடுபட்டு வருகிறது. இதில் மாடுகளை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள்,



மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகரில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் அங்கும், இங்கும் சுற்றி திரியும்போதும், ரோட்டில் செல்வோரை முட்டி தள்ளுகிறது. கடந்த வாரம் ஒரு பெண் படுகாயமடைந்தார். இதனால், நகரில் சுற்றும் மாடுகளை பிடிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் மூன்று நாட்களாக ஈடுபட்டு வருகிறது. இதில் மாடுகளை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள், காயமடைந்தனர்.

நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில்,"முதல் நாள் எட்டு மாடுகள் பிடிக்கப்பட்டன. மாட்டின் உரிமையாளர்களை வரவழைத்து, மாடுகளை வீட்டில் கட்டி வைத்து வளர்க்க அறிவுறுத்தப்பட்டது.

இரண்டாம் நாள் கிழங்கு மண்டிகள் வளாகம், ஊட்டி ரோட்டில் மூன்று மாடுகள் பிடிபட்டன. இந்த மாடுகளை தலைமை நீருந்து நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டது. மாட்டின் உரிமையாளரை வரவழைத்து, ஒவ்வொரு மாட்டுக்கு தலா, 5 ஆயிரம் விதம், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X