காபூல்: ஆப்கானிஸ்தானில் பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், 19 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இதற்குந் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் இஸ்லாமிய மதக் கல்வி போதிக்கப்படும் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், 16 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்; பல மாணவர்கள் காயமடைந்தனர்.
இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால், இது ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொடூரச் செயலாகத்தான் இருக்கவேண்டும் என, அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஆப்கானி குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்கு செல்ல உரிமை உண்டு. ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.