தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம்
தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம்

தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம்

Added : டிச 02, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி: வெளிநாடுகளில் உள்ளோர் தாயகத்திற்கு பணம் அனுப்புவதில், இந்தாண்டும் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.குடும்பத்தை விட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், அங்கிருந்து தங்களுடைய சம்பாத்தியத்தை குடும்பத்துக்கு அனுப்பி வருகின்றனர். இப்படி வெளிநாடுகளிலிருந்து தங்களுடைய தாயகத்துக்கு பணம் அனுப்புவதில், உலகளவில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம்
தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம்

புதுடில்லி: வெளிநாடுகளில் உள்ளோர் தாயகத்திற்கு பணம் அனுப்புவதில், இந்தாண்டும் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.


குடும்பத்தை விட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், அங்கிருந்து தங்களுடைய சம்பாத்தியத்தை குடும்பத்துக்கு அனுப்பி வருகின்றனர். இப்படி வெளிநாடுகளிலிருந்து தங்களுடைய தாயகத்துக்கு பணம் அனுப்புவதில், உலகளவில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம் வகித்து வருவதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.


latest tamil news

இது குறித்து, உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் உள்ளோர், தாயகத்திற்கு அதிக பணம் அனுப்புவதில், 2022ம் ஆண்டிலும், இந்தியர்களே முதலிடத்தை பிடித்துள்ளனர். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், நடப்பாண்டில் இந்தியர்கள் அனுப்பிய தொகை 100 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 8.1 லட்சம் கோடி ரூபாயாகும் என்பது தான். வரலாற்றில் இதுவரை வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு பணத்தை பெற்றதில்லை.


இது நடப்பாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டை விடவும் அதிகமாகும். மத்திய அரசு நடப்பு ஆண்டில், அன்னிய முதலீட்டாளர்கள் 6.48 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வர் என கணித்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு, வேலைக்கு திரும்புவோர் அதிகரித்ததை அடுத்து, நடப்பாண்டில் அதிக பணம் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (16)

Viswam - Mumbai,இந்தியா
02-டிச-202217:34:07 IST Report Abuse
Viswam நம்ம தலீவருகூட துபாய் குறுக்குசந்து துபாய் மார்க்கெட்லெந்து பணம் அனுப்புவதில் முதலிடம்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-டிச-202213:10:59 IST Report Abuse
Sampath Kumar அப்படினா என்ன அர்த்தம் இங்கே வேலை வெட்டி இல்லை அதுனால அங்க போய் சம்பாதிக்கிறானென்றாய்க்கு மற்ற நாட்டு காரன் இங்கே வந்து சம்பாதித்து அவன் ஊர்க்கு அனுப்புகின்றானோ அன்று தான் இந்தியா விளங்கும்
Rate this:
Cancel
JAISANKAR - Mamallapuram,இந்தியா
02-டிச-202212:06:24 IST Report Abuse
JAISANKAR இந்தியாவுக்கு அந்நிய செலாவணி சம்பாதிப்பது தொழிலாளர்கள் தான். இவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. இதுவே அம்பானி அதானி போன்றவர்கள் மூலம் அந்நிய செலாவணி கிடைத்தால் அவரகளுக்கு நிறைய சலுகை கிடைக்கும். இந்த தொகை மத்திய அரசுக்குத்தான் செல்கின்றது.வெளிநாட்டில் எங்காவது பிரச்சனையில் சிக்கி கொண்டால் நமது தூதரகம். கேட்கும் முதல் கேள்வி இங்கு ஏ ன் வந்தாய்? இதே கார்பொரேட் அதிபர் சென்றால் கால் கழுவி விடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X