செயற்கை கோள் அனுப்பிய குஜராத் மாநில புகைபடம்: பிரதமர் மோடி பகிர்ந்தார்| Dinamalar

செயற்கை கோள் அனுப்பிய குஜராத் மாநில புகைபடம்: பிரதமர் மோடி பகிர்ந்தார்

Updated : டிச 02, 2022 | Added : டிச 02, 2022 | கருத்துகள் (2) | |
சென்னை :'இஸ்ரோ' நிறுவனம், சமீபத்தில் விண்ணில் செலுத்திய பி.எஸ்.எல்.வி., சி.54 ராக்கெட்டின் இ.ஓ.எஸ். 06 செயற்கைகோள் அனுப்பிய புகைபடத்தை பிரதமர் மோடி பகிர்ந்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.புவியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்., - 6 உட்பட ஒன்பது செயற்கைக் கோள்களை, பி.எஸ்.எல்.வி., - சி54 ராக்கெட் கடந்த நவம்ப 26-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி
செயற்கை கோள், புகைபடம்: பிரதமர் ,மோடி பகிர்ந்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை :'இஸ்ரோ' நிறுவனம், சமீபத்தில் விண்ணில் செலுத்திய பி.எஸ்.எல்.வி., சி.54 ராக்கெட்டின் இ.ஓ.எஸ். 06 செயற்கைகோள் அனுப்பிய புகைபடத்தை பிரதமர் மோடி பகிர்ந்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

புவியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்., - 6 உட்பட ஒன்பது செயற்கைக் கோள்களை, பி.எஸ்.எல்.வி., - சி54 ராக்கெட் கடந்த நவம்ப 26-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி54 ராக்கெட், விண்ணில் வெற்றிகரமாக பாய்நது.


latest tamil news

அப்போது இ.ஓ.எஸ்., - 6, செயற்கைக்கோள் ,விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்தியாவின் இ.ஓ.எஸ்., - 6, மூன்றாம் தலைமுறைக்கான புவியை கண்காணிக்கும் திறன் உடைய இந்த செயற்கை கோள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நான்கு செயற்கைக்கோள் படங்களை அனுப்பியது.


இதனை பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பகிர்நதுள்ளார்.விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த ஆச்சரியமளிக்கும் படங்களை நீங்கள் பார்த்தீர்களா? குஜராத்தின் சில அழகான படங்களை பகிர்கிறேன்” என பிரதமர் மோடி எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X