வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ஜி-20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு எனது ஆதரவை அளிக்கிறேன் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஜி - 20 மாநாட்டின் முடிவில்,'ஜி - -20' அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும், இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு, பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ஜி - 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை, இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.
![]()
|
இந்நிலையில் இந்தியா ஏற்றுள்ள தலைமை பொறுப்பிற்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளதாவது:
இந்தியா, அமெரிக்காவின் வலுவான நட்புறவு நாடு. பருவநிலை மாற்றம், ரிசக்தி, உணவு நெருக்கடி ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில் ஜி20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பேற்க உள்ள இந்தியாவிற்கும், எனது நண்பர் பிரதமர் மோடிக்கும் எனது ஆதரவை அளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.