புதுடில்லி,:புதுடில்லியில் நடந்த மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு இன்று சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடில்லியில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி ஆட்சியில் மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில், மதுபானக் கொள்கை மாற்றப்பட்டது.
இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
![]()
|
இந்த விவகாரத்தில் இந்த முறைகேட்டில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் கவிதாவிற்கு இன்று சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது. ஐ தாராபாத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அல்லது டில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் வரும்6-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.