கருத்துக் கணிப்பு வேண்டாம்: பி.சி.ஐ., அறிவுறுத்தல்

Updated : டிச 03, 2022 | Added : டிச 03, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: 'குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டாம்' என அச்சு ஊடகங்களை, பி.சி.ஐ., எனப்படும் இந்திய பத்திரிகையாளர் சங்கம் அறிவுறுத்திஉள்ளது.ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் நவ., 12ல் நடந்தது. குஜராத் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று முன்தினமும், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாளும் நடக்க
Gujarat Election, PCI, Exit Poll கருத்துக் கணிப்பு, குஜராத் தேர்தல், பிசிஐ, ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல்,  Polls, Himachal Pradesh Assembly Elections, Press Council,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி: 'குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டாம்' என அச்சு ஊடகங்களை, பி.சி.ஐ., எனப்படும் இந்திய பத்திரிகையாளர் சங்கம் அறிவுறுத்திஉள்ளது.


ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் நவ., 12ல் நடந்தது. குஜராத் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று முன்தினமும், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாளும் நடக்க உள்ளன.


இந்நிலையில், இந்திய பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில், கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news

தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டியுள்ளதால், கருத்துக் கணிப்புகள் மற்றும் முடிவுகளை குறிப்பிடும் கட்டுரைகளை வெளியிட வேண்டாம் என அச்சு ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


கணிப்புகள் வாக்காளர்களின் மன நிலையை மாற்றும் என்பதால், இவற்றை வரும் ௫ம் தேதி மாலை 5:30 வரை வெளியிட வேண்டாம். இதை மீறி கருத்துக் கணிப்பை வெளியிடுவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாக அமையும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

03-டிச-202217:23:08 IST Report Abuse
ஆரூர் ரங் நக்கீரன் லயோலா போன்ற மிகவும் நம்பத் தகுந்த கருத்துக்கணிப்புகளை😛 யாவது அனுமதியுங்கள்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
03-டிச-202217:07:14 IST Report Abuse
S.Baliah Seer எந்தவித தேர்தல் கணிப்பும் வேண்டாம் என்று தேர்தல் ஆணையமும் ,உச்ச நீதி மன்றமும் தடைபோடவில்லை
Rate this:
Cancel
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
03-டிச-202216:58:46 IST Report Abuse
Srinivasan Krishnamoorthi வழக்கமான ஒன்று தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X