வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுக்கோட்டை: தமிழக அரசு எந்த தவறும் செய்யவில்லை. அண்ணாமலை கூறுவது தவறு என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக ஆன்லைன ரம்மி தடை செய்ய வேண்டும் என்றும் அதை ஒழுங்குமுறை படுத்த வேண்டும் என்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தான் கவர்னர். ஒப்புதல் வழங்க வேண்டும்.
ஏற்கனவே கவர்னர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய நிலையில் அந்த சட்டம் அரசியலில் வெளியிடப்பட்டது. ஆனால் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்பது உண்மை அரசாணை பிறப்பித்தால் வேறு யாராவது நீதி மன்றத்திற்கு சென்று தடையானை வாங்கி விட்டால் சட்டசபையில் இந்த சட்டத்திற்கான சட்ட முன் வடிவு தாக்கல் செய்து அனுமதி பெற முடியாது என்பதால் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. இதில் தமிழக அரசு எந்த தவறும் செய்யவில்லை அண்ணாமலை கூறுவது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.