ஆதரவற்றவர்கள்  காப்பகத்தில் ஒப்படைப்பு
ஆதரவற்றவர்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

ஆதரவற்றவர்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

Added : டிச 04, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்தில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்த 6 பேரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலையில் சுற்றித் திரியும் நபர்களை மீட்குமாறு எஸ்.பி., பகலவன் நேற்று உத்தரவிட்டார்.அதன்பேரில், கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் மனைவி லட்சுமி,



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்தில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்த 6 பேரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலையில் சுற்றித் திரியும் நபர்களை மீட்குமாறு எஸ்.பி., பகலவன் நேற்று உத்தரவிட்டார்.

அதன்பேரில், கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் மனைவி லட்சுமி, மொட்டையன் மனைவி செல்வி, ராஜேந்திரன் மனைவி மணிமேகலை, மணிப்பிள்ளை மகன் கண்ணன், சடையன் மகன் சாமிதுரை ஆகிய 5 பேரை போலீசார் மீட்டு கெடிலம் அருகே உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அதேபோல், சின்னசேலம் பஸ் நிலையம் அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த கருப்பண்ணன் மகன் தேவேந்திரன் என்பவரையும் மீட்டு காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X