புதுடில்லி: இன்று நடைபெற்ற டில்லி மாநகராட்சிக்கான தேர்தலில் வடமேற்கு பகுதியை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இது வரும் 2024-ல் நடைபெற உள்ள பொது தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
![]()
|
டில்லி மாநகராட்சிக்கான தேர்தல் இன்று (4 ம் தேதி) நடைபெற்றது. மாநகராட்சியில் 1.45 கோடிவாக்காளர்கள் உள்ளனர். இதில் 78.93 லட்சம் ஆண்கள், 66.10 லட்சம் பெண்கள் 1,061 மூன்றாம் பாலினத்தவர் 229 பேர் 100 வயதை கடந்தவர்கள் 2.04 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டடவர்கள் என வாக்களிக்க தாயாராகினர். மொத்தம் உள்ள 250 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாதிக்கு பாதியாக 50 சதவீதம் அளவிலான இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 50 சதவீதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது 53 சதவீத வாக்குகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
![]()
|
இதனிடையே வடமேற்கு டில்லி பகுதியை சேர்ந்த கதேவோரா பகுதி வாழ் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இப்பகுதிகளில்சாலை வசதிகள் , கழிவு நீர் வசதி, விளக்குகள் அமைப்பது போன்ற அடிப்படை வசதிகளை கூட அரசு செய்து தரவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் அடிப்படை வசதிகள் குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை என்பதால் தேர்தலை புறக்கணித்தனர்
டில்லி மாநகராட்சி வடக்கு தெற்கு கிழக்கு என மூன்று பிரிவாக இருந்த நிலையில் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது. வரும் 7 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. கடந்த தேர்தல்கள் அனைத்திலும் பா.ஜ., வெற்றி பெற்று வந்துள்ள நிலையில் மீண்டும் டில்லி மாநகராட்சியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ., உள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மியும் மாநகராட்சியை கைப்பற்றி புது கணக்கை துவங்க முனைப்பு காட்டி வருகிறது.
இதனிடையே கதேவோரா பகுதி மக்கள் தேர்தலை முழுமையாக புறக்கணித்துள்ளதால் வரும் 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்தலில் கட்சிகளின் வெற்றி தோல்வி எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement