ஆற்காடு: ஆற்காடில் தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி மற்றும் உடந்தையாக இருந்த அவரது மனைவியை, போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயது பெண் கணவரை பிரிந்து, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடில் வசிக்கிறார். அவரது, 17 வயது மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். ஆற்காடு அண்ணா நகரைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி பாஸ்கர், 33, என்பவர் அந்த பெண்ணுடன் அடிக்கடி பேச்சு கொடுத்து வந்தார்.
கடந்த மாதம், 28ம் தேதி நள்ளிரவில் பாஸ்கர், அவரது மனைவி துர்கா, 30 ஆகியோர், அந்த பெண் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கிருந்த பெண் மற்றும் அவரது மகளை, கஞ்சா வியாபாரி பாஸ்கர் பாலியல் பலாத்தாரம் செய்ய, அவரின் மனைவி துர்கா, மொபைல்போனில் அதை 'வீடியோ' எடுத்தார்.
அந்த வீடியோவை காண்பித்து, இருவரையும் அந்த கஞ்சா வியாபாரி அடிக்கடி பலாத்காரம் செய்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். வேதனையடைந்த அந்த பெண், ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நேற்று பாஸ்கர் மற்றும் அவர் மனைவியை போக்சோ சட்டத்தில் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.