மதவாதம் போதிக்கின்றனர்: ஆசிரியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு புகார்

Added : டிச 05, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
இந்துார்: இந்துாரில் உள்ள சட்டக் கல்லுாரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் உட்பட ஆறு பேர் மீது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவு புகார் கூறியுள்ளது. மதவாதத்தையும், அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிரான கருத்துக்களையும் போதிப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துாரில் அரசு சட்டக்
RSS Wing,Accuses,Teachers,Promoting Fundamentalism,Indore College, மதவாதம்

இந்துார்: இந்துாரில் உள்ள சட்டக் கல்லுாரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் உட்பட ஆறு பேர் மீது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவு புகார் கூறியுள்ளது. மதவாதத்தையும், அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிரான கருத்துக்களையும் போதிப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துாரில் அரசு சட்டக் கல்லுாரி அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவான, ஏ.பி.வி.பி., சார்பில், கல்லுாரி முதல்வரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news

இதில் கூறப்பட்டுள்ளதாவது: நான்கு முஸ்லிம் ஆசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மத அடிப்படைவாதம் குறித்து போதிக்கின்றனர்.அரசுக்கு எதிராகவும், நம் ராணுவத்துக்கும் எதிராகவும் கருத்துக்களை திணிக்கின்றனர்.

இரண்டு ஹிந்து ஆசிரியர்கள் அலட்சியப் போக்குடன் இருப்பதுடன் அரசுக்கு எதிரான கருத்துக்களை மாணவர்களிடையே பரப்பி வருகின்றனர்.'லவ் ஜிஹாத்' பரப்புவதுடன், அசைவ உணவுகளுக்கு ஆதரவாகவும் இவர்கள் பேசி வருகின்றனர். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த ஆசிரியர்கள் ஐந்து நாட்களுக்கு பாடங்கள் நடத்துவதற்கு, கல்லுாரி முதல்வர் இமானுர் ரஹ்மான் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

Rafi - Riyadh,சவுதி அரேபியா
05-டிச-202215:17:41 IST Report Abuse
Rafi இப்போது இந்த பிஜேபி மாணவர்களின் குற்றச்சாட்டிற்கு இது போன்ற காட்சிகளை வெளி கொண்டுவந்து நடவடிக்கை எடுக்கலாம். வெறும் குற்ற சாட்டின் பேரில் நிறுத்தி வாய்ப்பு என்பதே அரசின் அடக்கு முறைக்கு கல்லூரி நிர்வாகம் அடிபணித்திருக்கு. குற்ற சாட்டின் வீரியத்தை வலுப்படுத்த இல்லாத ஒரு லவ் ஜிகாத், ராணுவத்திற்கு எதிராக என்று குற்றசாட்டு என்று வரிசை படுத்தி இருக்கின்றார்கள்...
Rate this:
visu - tamilnadu,இந்தியா
05-டிச-202216:40:19 IST Report Abuse
visuநடந்ததா இல்லையா என்பதே முக்கியம் இதுபோன்ற தேச விரோத எண்ணம் கொண்டவர்களை சவூதி அரேபியாவிற்கே விரட்டி அடிக்க வேண்டும்...
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
05-டிச-202212:43:08 IST Report Abuse
Aarkay இங்கும் இதெல்லாம் காலகாலமாய் நடந்து வருகிறது. பால் பவுடருக்கும், ஹாஸ்டல் ரூமிற்கும், பிச்சை காசிற்கும் அந்நாளிலிருந்தே மதம் மாறுவது நடந்து கொண்டுதானிருக்கிறது.
Rate this:
Cancel
05-டிச-202209:52:27 IST Report Abuse
nandha kumar தமிழ்நாட்டிலும் இதுபோன்று நடந்தாலும் அரசின் ஆதாரவோடு நடப்பதால் யாரும் எதுவும் செய்யமுடிவதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X