வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி பெரும்பான்மை இடங்களில் வெல்லும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் மாநகராட்சி தேர்தல் நேற்று (டிச.,4) நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை டிச.,7ல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியானது.
'இந்தியா டுடே

'இந்தியா டுடே' வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம்ஆத்மி கட்சி 149 முதல் 171 இடங்களும், பா.ஜ., 69 முதல் 91 இடங்களும், காங்கிரஸ் 3 முதல் 7 இடங்களும், மற்றவை 5 முதல் 7 இடங்களும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆம்ஆத்மி கட்சி 43 சதவீத ஓட்டுகளையும், பா.ஜ., 35 சதவீத ஓட்டுகளையும், காங்., 10 சதவீத ஓட்டுகளையும் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சியை தன்வசப்படுத்திய பா.ஜ.,விடம் இருந்து ஆம்ஆத்மி கைப்பற்றும் என இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டைம்ஸ்நவ் - இடிஜி'
'டைம்ஸ்நவ் - இடிஜி' கருத்துக்கணிப்பில், ஆம்ஆத்மி கட்சி 146 - 156 இடங்களும், பா.ஜ., 84-94 இடங்களும், காங்கிரஸ் 6 - 10 இடங்களும், மற்றவை 4 இடங்கள் வரையும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.