ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த மாணவிக்கு உரிய பதிவு சான்றிதழ் இல்லாததால் கல்லுாரியில் சேர்ந்து படிக்க முடியாமல் சிரமப்படுகிறார்.
மண்டம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி சுதா, மகள் நிஷாந்தினி ஆகியோர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது: கடந்த 30 ஆண்டுகளாக அகதிகள் முகாமில் தற்காலிமாக தங்கியுள்ளோம். 2007ல் சட்ட விரோதமாக இலங்கை செல்ல முயன்ற வழக்கு இதுவரை முடிவுக்கு வராமல் உள்ளது. இதனால் உதவித்தொகை, அரசின் சலுகைகளை பெற முடியவில்லை.
தற்போது உரிய பதிவு சான்றிதழ் இல்லாததாலும், வழக்கு உள்ளதாலும் மகள் கல்லுாரி சென்று படிக்க முடியவில்லை. எனவே வழக்கை முடிவுக்கு கொண்டு வரவும், தொடர்ந்து மீள்பதிவு (அகதி) சான்றிதழ் வழங்க கலெக்டர் உதவி செய்ய வேண்டும், என கூறியுள்ளனர்.