திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அகஸ்தியர் கூடம் மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின கனி சமூகத்தினர் வசித்து வருகின்றனர் இவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை தவறாமல் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தங்கள் வழக்கத்திலிருந்து மாறாமல் நேற்று(டிச.,06) சபரிமலை சன்னதிக்கு வந்தனர். அவர்களில் பலர் ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனை தரிசிக்க மட்டுமே, காட்டிலிருந்து வெளியே வருகின்றனர். மற்ற எந்த காரியத்திற்காகவும் காட்டை விட்டு வெளியே வருவதில்லை.
கோவிட் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சபரிமலைப் பயணத்தை, இந்த ஆண்டு மீண்டும் துவக்கி உள்ளனர். இம்முறை 20 பேர் கொண்ட குழுவினர் சாமி தரிசனம் செய்தனர்.
மரபுப்படி, மூங்கில் குச்சிகளில் நிரம்பிய காட்டுத் தேன்,கரும்பு, பூக்கூடை, மூங்கில், கரும்பு, நாணல் ஆகியவற்றால், தூய்மையுடன் நெய்யப்பட்ட பெட்டிகளுடன் கனி குழுவினர் வந்து சன்னிதானத்தில் காணிக்கையாக செலுத்தினர்.