வேலுார்:அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.தி.மு.க., பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவர் கடந்தாண்டு இறந்து விட்டார். இவரது மகள் பாரதி, 55. அவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகளுடன் வேலுார் மாவட்டம், காட்பாடியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், காட்பாடி அருகே லத்தேரியில் ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் பெண் பிணம் ஒன்று கிடந்தது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில் இறந்து கிடந்தது பாரதி, 55, என்பதும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தி.மு.க., வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.