''நசிமுதீன் தள்ளி உட்காரும்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்த அண்ணாச்சி, ''இளம் வீரர்களை விளையாட விடாம, அதிகாரிகள் கட்டைய போடுதாவ வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார்.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, நுங்கம்பாக்கத்துல டென்னிஸ் வீரர்கள் பயிற்சி எடுக்க, அருமையான விளையாட்டு அரங்கம் இருக்குல்லா... அங்கன மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், தினமும் காலையில வந்து டென்னிஸ் விளையாடுதாவ வே...
![]()
|
''அவங்க விளையாடும் போது, மற்ற யாரையும் விளையாட அனுமதிக்கிறது இல்ல... பயிற்சி பெற வர்ற இளம் வீரர்கள், விளையாட முடியாம காத்து கிடக்காவ வே...
''குறிப்பா, ஓய்வு பெறப் போகும் மூத்த ஐ.ஏ.எஸ்., ஒருத்தர், தன் நண்பருடன் விளையாடும் போது, 'வேற யாரையும் அனுமதிக்கக் கூடாது'ன்னு கண்டிப்பா உத்தரவு போடுதாரு... அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாம, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் கம்முன்னு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.