திருநெல்வேலி : திருநெல்வேலிமாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்ட தகராறில் 17 வயது பிளஸ் 2 மாணவரை கத்தியால் குத்திய சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.
இப்பள்ளியில் பிளஸ் 2 தொழிற்பயிற்சி பிரிவு மாணவர்களில் ஒருவரது புத்தகம் காணாமல்போனதால் இந்த இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று கத்தியுடன் வந்த ஒரு மாணவர் காலை 11:30 மணிக்கு இடைவேளையின் போது சக மாணவரை முதுகில் கத்தியால் குத்தினார்.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கத்தியால் குத்திய மாணவரை போலீசார் கைது செய்தனர்.