சென்னை : இலங்கை கடற்படை கைது செய்து விடுவித்த, தமிழக மீனவர்கள், 14 பேர், நேற்று சென்னை வந்தடைந்தனர்.
நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், 14 பேர், நவ.,14ல், பாக் ஜலசந்தி அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்தனர்.
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. மீனவர்கள் 14 பேரையும், இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்தது.
இவர்கள், ஏர் இந்தியா விமானம் வாயிலாக, நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாஸ்போர்ட் இல்லாததால், அவசர சான்றிதழ் வாயிலாக, அனைவரும் சென்னை திரும்பினர்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர்களை, மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.