தொண்டாமுத்துார்: கார்த்திகை தீப திருநாளான நேற்று கோவை ஈஷா யோகா மையம் முழுவதும் தீப ஒளியால் ஜொலித்தது.
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியான லிங்கத்தில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு விளக்கு ஏற்றினார். ஈஷாவில் உள்ள சூரிய குண்ட மண்டபம், லிங்க பைரவி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆதியோகி சிலையை சுற்றிலும் பொதுமக்கள் விளக்குகளை ஏற்றினர். இதனால், ஒட்டுமொத்த ஈஷாவும், தீப ஒளியால் ஜொலித்தது.