''அனுமதி பெறாம கொடிக் கம்பங்கள் வச்சது, மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பிறந்த நாள் சமீபத்துல வந்துச்சே... அன்னைக்கு, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., சார்புல, ஆயிரம் விளக்கு பகுதிக்கு உட்பட்ட அண்ணா சாலை - ஒயிட்ஸ் ரோடு சந்திப்புல, 55 அடி உயரத்துக்கு தி.மு.க., கொடிக் கம்பத்தை நட்டு, கொடியேத்தினாங்க...
''இதேபோல, சூளைமேடு பகுதியில இருக்கிற நெல்சன் மாணிக்கம் சாலையிலும், 45 அடி உயர கொடிக் கம்பத்தை வச்சிருக்காங்க... இதுக்கெல்லாம், மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் வாங்கலைங்க...
![]()
|
''இந்த கொடிக் கம்பங்கள் சாய்ந்தாலோ, வாகன ஓட்டிகள் மோதிட்டாலோ, பெரிய அளவுல விபத்துக்கள் நடந்துடும்னு அந்த பகுதி மக்கள் பயப்படுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''போன, 2019 செப்டம்பர், 12ம் தேதி, சென்னையில பிளக்ஸ் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ இறந்து போனதை, எல்லாரும் மறந்துட்டா போல ஓய்...'' என்ற படியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.