கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 3 பேர் கைது| Dinamalar

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 3 பேர் கைது

Updated : டிச 07, 2022 | Added : டிச 07, 2022 | கருத்துகள் (4) | |
கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.,23 நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பொறியியல் பட்டதாரி ஜமேஷா முபின்(29) பலியானார். அவரது வீட்டில் நடந்த சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதின், கோவை ஜிஎம்
coimbatore, carblast, arrest, NIA, கோவை கார் குண்டுவெடிப்பு,  கைது, என்ஐஏ,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.,23 நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பொறியியல் பட்டதாரி ஜமேஷா முபின்(29) பலியானார். அவரது வீட்டில் நடந்த சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதின், கோவை ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



latest tamil news

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கைதானவர்களை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். நீதிமன்ற காவலில் பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முகமது தவுபிக்(25) , உமர் பரூக் (39) மற்றும் பெரோஸ் கான்(28) ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X