புதுடில்லி:பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, 2016ல் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்குகளை, நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, 'அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது' என, ரிசர்வ் வங்கி சார்பில் வாதிடப்பட்டது.
![]()
|
'நாட்டின் நலனுக்காக மத்திய அரசு சில கொள்கை முடிவுகளை எடுக்கலாம். இதில் நீதிமன்றம் தலையிட விரும்ப வில்லை. அரசின் முடிவுகள் செயல்படுத்தப்பட்ட விதங்களை, கைகளைக் கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. 'இதில் நீதிமன்றம் தலையிட முடியும்' என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியிருந்தது.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்து, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்தன.
இதையடுத்து, அரசின் முடிவு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ௧௦ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.