ஆமதாபாத்: குஜராத்தின் மோர்பி தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் தொங்கு பாலம் இடிந்து 135 பேர் உயிரிழந்த தொகுதி மோர்பி. இங்கு பா.ஜ., சார்பில், 5 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த காந்திலால் அம்ருடியா களமிறக்கப்பட்டார். பால விபத்தின் போது, இவர் முன்னின்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டார். ஓட்டு எண்ணிக்கையில், காந்திலால் அம்ருடியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். முடிவில் 59 சதவீதத்திற்கு மேலான ஓட்டுகளை பெற்று அவர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் ஜெயந்தி படேல் 2வது இடத்தையும், ஆம் ஆத்மியின் பங்கஜ் ரன்சரியா 3வது இடத்தையும் பிடித்தனர்.