வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத் மக்களின் முடிவை ஏற்று கொள்வதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் அக்கட்சி 156 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 77 தொகுதிகளை வெற்றி பெற்ற அக்கட்சி தற்போது 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது.
இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குஜராத் மக்களின் முடிவை தாழ்மையுடன் காங்கிரஸ் ஏற்று கொள்கிறது. கட்சியை மறுசீரமைப்பதுடன், நாட்டின் நலனுக்காகவும் , மாநில மக்களின் உரிமைக்காகவும் கடினமாக உழைப்போம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.