ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை ஏமாற்றியது: 3000 ஏக்கரில் வளர்ந்த நெற்பயிர் கருகியது

Added : டிச 08, 2022 | |
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 21 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு நெற்பயிர் வளர்ந்த நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக போதிய பருவ மழை இல்லாததால்ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி விட்டன.குறிப்பாக உப்பூர், கடலூர், சித்தூர்வாடி, சேந்தனேந்தல், கோவிலேந்தல், கலங்காப்புலி, வெட்டுக்குளம், ஏ.மணக்குடி, ஊரணங்குடி உள்ளிட்ட
ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை ஏமாற்றியது: 3000 ஏக்கரில் வளர்ந்த நெற்பயிர் கருகியது



ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 21 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு நெற்பயிர் வளர்ந்த நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக போதிய பருவ மழை இல்லாததால்ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி விட்டன.

குறிப்பாக உப்பூர், கடலூர், சித்தூர்வாடி, சேந்தனேந்தல், கோவிலேந்தல், கலங்காப்புலி, வெட்டுக்குளம், ஏ.மணக்குடி, ஊரணங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுஉள்ள நெற்பயிர்களில் 3000 ஏக்கரில் நெற்பயிர்கள் வயல்களில் ஈரப்பதம் இன்றி கருகிவிட்டன.

வானம் பார்த்த பூமியில் பருவ மழையை எதிர்பார்த்து சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் பருவ மழை ஏமாற்றியதால் கருகிய நிலையில் இப்பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் பயிர் இன்சூரன்ஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X