திருவக்கரை கோயில் கும்பாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது| Dinamalar

திருவக்கரை கோயில் கும்பாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது

Added : டிச 09, 2022 | |
வானுார்:விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருவக்கரையில் பிரசித்தி பெற்ற சந்திர மவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பின் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கும்பாபிஷேக விழா நேற்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் துவங்கியது.தொடர்ந்து தனபூஜை, கோ பூஜை, மாலை 4:00
 திருவக்கரை கோயில் கும்பாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது

வானுார்:விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருவக்கரையில் பிரசித்தி பெற்ற சந்திர மவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பின் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கும்பாபிஷேக விழா நேற்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் துவங்கியது.

தொடர்ந்து தனபூஜை, கோ பூஜை, மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடந்தது. இன்று மாலை 4:30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, நாளை காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

கும்பாபிஷேக தினமான 11ம் தேதி காலை 10:55 மணிக்கு விமானங்கள், ராஜ கோபுரங்களுக்கும், 11:15 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், உதவி ஆணையர் விஜயராணி, ஆய்வாளர் உமா மகேஸ்வரி, மேலாளர் ரவி, சங்கர் குருக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X