காட்டுப்பன்றி கடித்து தொழிலாளி காயம்

Added : டிச 09, 2022 | |
Advertisement
வால்பாறை:வால்பாறை அருகே, குப்பை கொட்ட சென்ற பெண் தொழிலாளி, காட்டுப்பன்றி கடித்ததில் படுகாயமடைந்தார்.வால்பாறையில், யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடுகள் உள்ளிட்டவை, குடியிருப்பு பகுதியில் அதிகளவில் சுற்றுவதால், வனவிலங்கு - மனித மோதல் அடிக்கடி ஏற்படுகிறது.இந்நிலையில், சோலையாறு எஸ்டேட் இரண்டாம் பிரிவில், தொழிலாளியாக பணி புரிந்து வருபவர் ஜெபஸ்டீன். இவரது மனைவி மேரி,60. இவர்

வால்பாறை:வால்பாறை அருகே, குப்பை கொட்ட சென்ற பெண் தொழிலாளி, காட்டுப்பன்றி கடித்ததில் படுகாயமடைந்தார்.

வால்பாறையில், யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடுகள் உள்ளிட்டவை, குடியிருப்பு பகுதியில் அதிகளவில் சுற்றுவதால், வனவிலங்கு - மனித மோதல் அடிக்கடி ஏற்படுகிறது.

இந்நிலையில், சோலையாறு எஸ்டேட் இரண்டாம் பிரிவில், தொழிலாளியாக பணி புரிந்து வருபவர் ஜெபஸ்டீன். இவரது மனைவி மேரி,60. இவர் நேற்று மதியம், 2:30 மணிக்கு வீட்டின் பின்பக்கம் குப்பை கொட்ட சென்றார்.

அப்போது, காட்டுப்பன்றி அவரது வலது காலை கடித்தது. அவரது அலறல் சப்தம் கேட்டதும், அவரை விட்டு காட்டுப்பன்றி ஓடியது. படுகாயமடைந்த அவர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். காயமடைந்த தொழிலாளிக்கு, வனத்துறை சார்பில், ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X