மயிலாடுதுறை: சீர்காழி அருகே புயல் மற்றும் கடல் சீற்றத்தில் சிக்கி விஏஓ ஒருவர் படுகாயம் அடைந்தார்.
மாண்டஸ் புயலினால் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது ஒரு சில கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்து குடியிருப்புகளை தண்ணீர் சுழற்ந்து உள்ளது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீர்காழி தாலுக்கா மடவா மேடு கிராமத்தில் புயல் மற்றும் கடல் சீற்றத்தின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கொள்ளிடம் யூனியன் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் சென்றனர். கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் உடன் சென்றார்.
கடற்கரையோரம் ஆய்வு மேற்கொண்ட போது, அவர் கடல் சீற்றத்தின் காரணமாக அலையில் சிக்கி படுகாயம் அடைந்தார் பவளச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தின் போது அங்கு இருந்த சேர்மன் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகளும் அலையின் தாக்குதலுக்கு ஆளாகி காயங்கள் எதுவும் இன்றி தப்பினர்.