வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
புதுடில்லி: தரமான ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவ கல்லுாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா லோக்சபாவில் தெரிவித்தார்.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: சிறப்பான டாக்டர்களை உருவாக்க வேண்டுமானால் தரமான கல்வியை அளிக்க வேண்டும். இதை சரிபார்க்க, நாடு முழுதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் மத்திய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பி உள்ளது.
அந்த குழுவினர் ஆய்வு செய்வதோடு மட்டுமின்றி, அந்த கல்லுாரிகளில் தரமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்ட உள்ளனர் என்பதற்கான உறுதி பத்திரத்தையும் அளிக்க வேண்டும். தரமான ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவக் கல்லுாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும். அரசு மருத்துவக் கல்லுாரியில் தரமான ஆசிரியர்கள் இல்லையெனில் அதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். தனியார் கல்லுாரிகள் என்றால் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். யார் முறைகேட்டில் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதுடில்லி: தரமான ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவ கல்லுாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா லோக்சபாவில்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement