திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்-8' திட்டத்தில், விவசாயிகள், அதிக ஆர்வத்துடன், சவுக்கு மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
அவ்வகையில், வெள்ளகோவில் அருகே உள்ள நாச்சிபாளையத்தில், இளங்கோ ப்ளூ மெட்டல்ஸ் வளாகத்தில், நேற்று, 300 காற்றுத்தடுப்பான் சவுக்கு மரக்கன்றுகளும், மூலனுார் அருகே கருமங்கிணர் பகுதியில் உள்ள, வட்டப்பாறை காட்டில், 110 வேம்பு மரக்கன்றுகளும் நேற்று நடப்பட்டன.
இதில், தோட்ட உரிமையாளர்கள் பூபதி, பழனிசாமி பங்கேற்று மரக்கன்று நடும் பணிகளை துவக்கி வைத்தனர்.
'வனத்துக்குள் திருப்பூர் -8' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.