விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பாண்டியன், மாவட் எஸ்.பி., ஸ்ரீநாதா உள்ளிட்ட அதிகாரிகள் மாண்டஸ் புயல் பாதிக்கப்பட்ட மரக்காணம் பகுதியில் உள்ள 19 மீனவ கிராமங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் மோகன் அளித்த பேட்டி : மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஐந்து இடங்களில் 13 மரங்கள் விழுந்தன, அதனையும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து தடை இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
மேலும் மாவட்டம் முழுவதும் வேறு ஏதாவது பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கணக்கெடுப்பு செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிள்ளை சாவடி பகுதிகளில் ரூ. 14 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பணி, மழை காரணமாக தாமதம் ஆகின. நாளை முதல் அந்த பணி துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.