ஸ்டாலின் கான்வாயில் தொங்கிய படி சென்ற சென்னை மேயர், கமிஷனர்

Added : டிச 10, 2022 | கருத்துகள் (81) | |
Advertisement
சென்னை: சென்னையில் புயல் பாதிப்புகளை பார்வையிட சென்று திரும்பிய முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா மற்றும் கமிஷனர் ககன்தீப் சிங் தொங்கியபடி பயணித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.மாமல்லபுரம் அருகே நேற்று நள்ளிரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஸ்டாலின் கான்வாயில் தொங்கிய படி சென்ற சென்னை மேயர், கமிஷனர்

சென்னை: சென்னையில் புயல் பாதிப்புகளை பார்வையிட சென்று திரும்பிய முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா மற்றும் கமிஷனர் ககன்தீப் சிங் தொங்கியபடி பயணித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மாமல்லபுரம் அருகே நேற்று நள்ளிரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த ஸ்டாலின், மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பிறகு காசிமேடு சென்று மீனவ கிராமங்களை பார்வையிட்டதுடன், சேதமடைந்த படகுகளையும் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, எம்.பி., கலாநிதி, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங், அதிகாரிகள் உடன் சென்றனர். பிறகு பத்திரிகையாளர்களையும் சந்தித்த ஸ்டாலின், அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

இதனை தொடர்ந்து ஸ்டாலின் அங்கிருந்து காரில் கிளம்பினார். அப்போது முன்னே சென்ற கான்வாயில் பிரியா தொங்கியபடி பயணித்தார். அவருக்கு பின்னால், கமிஷனர் ககன்தீப் சிங்கும் கான்வாயில் ஏறி தொங்கியபடி பயணம் செய்தார். இதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் படம் பிடித்தனர்.


latest tamil news



அதனை பார்த்த பிரியா முகத்தை மூடி கொண்டார். இது குறித்த படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (81)

g.s,rajan - chennai ,இந்தியா
11-டிச-202211:19:43 IST Report Abuse
g.s,rajan பிடி அப்டி இருக்கு, எல்லாரும் நல்லாத் தொங்கி நம்ம மூதாதையரை நினைவு படுத்தறாங்க .
Rate this:
Cancel
11-டிச-202209:59:39 IST Report Abuse
Rajesh Rajesh tamilnattu makkaluku evlo sonnalum puthi vara povadhillai
Rate this:
Cancel
11-டிச-202209:47:24 IST Report Abuse
பேசும் தமிழன் பக்கத்து மாநிலத்தில் கார் மேலே அமர்ந்த சென்ற நடிகர் கைது செய்யப்பட்டு உள்ளார் ....ஆனால் இங்கு மேயர், கமிஷ்னர் ...காரில் தொங்கி கொண்டு போய் உல்லார்கள்....அவர்கள் மீது என்ன நடவடிக்கை???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X