விதிகளை மீறிய கார்: தடுத்த போலீசை 4 கி.மீ., இழுத்து சென்ற டிரைவர் கைது
விதிகளை மீறிய கார்: தடுத்த போலீசை 4 கி.மீ., இழுத்து சென்ற டிரைவர் கைது

விதிகளை மீறிய கார்: தடுத்த போலீசை 4 கி.மீ., இழுத்து சென்ற டிரைவர் கைது

Updated : டிச 13, 2022 | Added : டிச 13, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
இந்தூர்: ம.பி.,யில் மொபைல்போன் பேசியபடி வந்த கார் டிரைவருக்கு போலீஸ் ஒருவர் அபராதம் விதித்தார். ஆனால், அதனை செலுத்தாமல் கிளம்பிய போது, தடுத்த போலீசை 4 கி.மீ., தூரம் காரின் முன்பக்கத்தில் வைத்து இழுத்து சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சத்ய சாய் சதுக்கம் பகுதியில் சிவ் சிங் சவுகான்(50) என்ற போக்குவரத்து போலீஸ் பணியில் ஈடுபட்டிருந்தார்.
விதிகளை மீறிய கார்: தடுத்த போலீசை 4 கி.மீ., இழுத்து சென்ற டிரைவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இந்தூர்: ம.பி.,யில் மொபைல்போன் பேசியபடி வந்த கார் டிரைவருக்கு போலீஸ் ஒருவர் அபராதம் விதித்தார். ஆனால், அதனை செலுத்தாமல் கிளம்பிய போது, தடுத்த போலீசை 4 கி.மீ., தூரம் காரின் முன்பக்கத்தில் வைத்து இழுத்து சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.



மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சத்ய சாய் சதுக்கம் பகுதியில் சிவ் சிங் சவுகான்(50) என்ற போக்குவரத்து போலீஸ் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக , டிரைவர் ஒருவர் மொபைல் போன் பேசியபடியே காரை ஓட்டி வந்தவரை, சிவ்சிங் தடுத்து நிறுத்தினார். சாலை விதிகளை மீறியதற்காக அவருக்கு அபராதமும் விதித்தார். ஆனால், அபராதம் செலுத்தாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த டிரைவர், காரை வேகமாக கிளப்ப முயன்றார். ஆனால், அவரை சிவ் சிங் தடுத்து நிறுத்த முயன்றும் முடியாமல் போனது.


இதனால், அவர் காரின் பேனட்டில் குதித்தார். அப்படியும் காரை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டி சென்றார். ஆனால், சிவ்சிங் காரை இறுக பிடித்து கொண்டதால் கீழே விழவில்லை. இதனால், மேலும் கோபமடைந்த அந்த டிரைவர் காரை வேகமாக ஓட்டி சென்று திடீரென பிரேக் போடுவது, முன்னாள் சென்ற கார் மீது மோதுவது போல் சென்று நிறுத்துவது என பல முயற்சிகள் செய்தும் டிரைவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இவ்வாறு 4 கி.மீ., தூரம் சிவ்சிங்கை காரின் முன்பக்கத்தில் வைத்து டிரைவர் இழுத்து சென்றார்.



latest tamil news

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக வந்து அந்த காரை சுற்றி வளைத்தனர். இதனால், டிரைவர் வேறுவழியின்றி காரை நிறுத்தினார். சிவ்சிங்கும் எந்த காயமுமின்றி தப்பினார். தொடர்ந்து, டிரைவரை கைது செய்த போலீசார், காரை ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஓட்டுதல், அரசு பணியாளருக்கு காயம் ஏற்படுவதை போன்று ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் காரில் இழுத்து செல்லப்படும் காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவானது. இது தற்போது வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (16)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
13-டிச-202218:24:10 IST Report Abuse
venugopal s பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது!
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
13-டிச-202220:19:10 IST Report Abuse
KavikumarRamஇப்ப என்ன, அந்த தப்பு செஞ்ச அந்த கார் டிரைவரை மேயராவா ஆக்கிருக்காங்க??? முரசொலி மூளை ஹ்ஹஹாஹா என்னத்த சொல்ல. ஆனா தமிழ்நாட்ல மேயரையே தொங்க விடுறானுங்க. அதுக்கு பெண்விடுதலைன்னு பெயரை வச்சு பாரதியை வேற கேவலப்படுத்துறானுங்க....
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
13-டிச-202217:58:28 IST Report Abuse
கதிரழகன், SSLC கொலை முயற்சி வழக்கு. ஆயுள் தண்டனை.
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
13-டிச-202215:00:05 IST Report Abuse
Palanisamy Sekar ஓட்டுநர் லைசன்ஸை வாழ்நாள் முழுக்க தடை செய்ய வேண்டும் இந்த நபருக்கு. ஜெயில் வாசம் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு கொடுக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X