'நின்றால்' மாநாடு; 'நடந்தால்' பேரணி; 'அமர்ந்தால்' பாராட்டு: தமிழகம் இனி 'கலகல'

Updated : டிச 14, 2022 | Added : டிச 14, 2022 | கருத்துகள் (47) | |
Advertisement
சென்னை: ஒரு வழியாக தமிழர்கள் 'ஜென்ம சாபல்யம்' அடைந்துவிட்டனர். முதல்வர் மகன் அமைச்சராகி விட்டார். நாடே எதிர்பார்த்த நல்ல சம்பவம் நடந்துவிட்டது. இனி தமிழக தெருக்களில் பாலும் தேனும் ஆறாக ஓடும்.மக்கள் எவ்வித கவலையுமின்றி மகிழ்ச்சியில் திளைப்பார்கள். திமுக.,வினரோ தற்போதுள்ள முதல்வரையும், வருங்கால முதல்வரையும் எப்படியெல்லாம் குஷிப்படுத்தலாம் என்று மூளையை கசக்கி
'நின்றால்' மாநாடு; 'நடந்தால்' பேரணி; 'அமர்ந்தால்' பாராட்டு: தமிழகம் இனி 'கலகல'

சென்னை: ஒரு வழியாக தமிழர்கள் 'ஜென்ம சாபல்யம்' அடைந்துவிட்டனர். முதல்வர் மகன் அமைச்சராகி விட்டார். நாடே எதிர்பார்த்த நல்ல சம்பவம் நடந்துவிட்டது. இனி தமிழக தெருக்களில் பாலும் தேனும் ஆறாக ஓடும்.

மக்கள் எவ்வித கவலையுமின்றி மகிழ்ச்சியில் திளைப்பார்கள். திமுக.,வினரோ தற்போதுள்ள முதல்வரையும், வருங்கால முதல்வரையும் எப்படியெல்லாம் குஷிப்படுத்தலாம் என்று மூளையை கசக்கி பிழிய போகிறார்கள்.


ஏற்கனவே தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை டிவி சேனல்களில் 'முதல்வர் நேரம்' என்றாகிவிட்டது. ஒரு நாள் கூட தவறாமல், ஏதாவது ஒரு திட்டத்தை அவர் துவக்கி வைப்பதும், அந்நிகழ்ச்சியை 'லைவ்' ஆக ஒளிபரப்ப டிவி சேனல்கள் போட்டி போடுவதும் ஒரே அமர்க்களம் தான்.


இனிமேல் புதிய அமைச்சருக்கும் என்று தனியாக நேரத்தை டிவி சேனல்கள் ஒதுக்க வேண்டி வரலாம். அவர் நின்றால் செய்தி; நடந்தால் லைவ் என்று கேமராக்கள் அவர் பின்னால் துரத்திக் கொண்டே ஓடும். இல்லாவிட்டால், அரசு கேபிளில் இருந்து அந்த சேனல்கள் அறுக்கப்பட்டு விடும்.


யார் அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்களின் கையை காலைப் பிடித்து காசு பார்ப்பதையும், காரியத்தை சாதித்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ள சினிமாக்காரர்கள், தாத்தாவுக்கு செய்தது போல், பேரனுக்கும் வாரம் ஒரு பாராட்டு விழா நடத்த போகிறார்கள்.


இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமை, ஆளுங்கட்சியின் டிவி சேனலுக்கு மட்டுமே கொடுக்கப்படும். அந்த நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சர்களையும், விளம்பரங்களையும் பெற்று ஆளுங்கட்சி சார்பு சேனல்கள் 'கொழுக்கப்' போகின்றன.


இவற்றையெல்லாம் பார்க்கும் தமிழக பொது ஜனம், தமிழகத்தில் இருந்த எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விட்டன. நாடு சொர்க்க பூமியாக மாறிவிட்டது என்று நினைத்து நினைத்து பெருமைப்பட்டு கொள்ளலாம்.


போஸ்டர் ஒட்டுவதற்கு பெயர் பெற்ற மதுரை, கோவை போன்ற ஊர்களில் இனி புதுப்புது பட்டங்களுடன் நாம் மறந்து போன ராஜாக்களின் பெயர்களுடன் தொடர்ப்படுத்தி போஸ்டர்களை பார்க்கலாம். மதுரையில் 10 * 10 சைஸ் என்றால், கோவையில் 20 * 20 சைஸ் போஸ்டர் ஒட்டி வரவேற்பு நடக்கலாம். ஒரே வருடத்தில் இதற்கு என்றே காத்து கொண்டிருக்கும் பல தனியார் பல்கலைக்கழகங்கள் 'டாக்டர்' பட்டம் கொடுக்கும்.


அடுத்து புதிய அமைச்சரின் மகன் எப்போது முதல்வர் ஆவார் என்று ஆர்வம் கொப்பளிக்க காத்திருக்கலாம்.


latest tamil news


இதைப்படித்துவிட்டு, யாரை குறிப்பிடுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கனவு கண்டால், அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல. அடுத்த 4 வருடங்களுக்கு நல்ல தமாஷ் தான்.. ஜாலி தான் மக்களுக்கு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (47)

Duruvesan - Dharmapuri,இந்தியா
15-டிச-202207:01:36 IST Report Abuse
Duruvesan குடும்ப கம்பெனி, கட்டுஸ் உடையா அடுத்து இன்பா என்பது முதலாளி வரிசை. காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட ஹிந்து அடிமைகளுக்கு ஏன் எரியுது
Rate this:
Cancel
15-டிச-202204:51:54 IST Report Abuse
SUBBU,MADURAI இப்படி கட்டுமரத்தின் உண்மை கதை என்னிடம் நிறைய உண்டு யார் விரும்பி கேட்கிறீர்களோ என்னை லைக் பண்ணுங்கள்.😄😁
Rate this:
Cancel
15-டிச-202204:12:42 IST Report Abuse
SUBBU,MADURAI //நின்றால் மாநாடு அருமையான தலைப்பு//நம் விடியல் முதல்வர்"ஸ்"டாலின் ஒரு திருமண விழா நிகழ்சியின் போது தன் பெயர் காரணத்தை சொன்னது இப்போது நம் ஞாபகத்துக்கு வருகிறது.என் தந்தை முத்துவேல் கருணாநிதி அப்போது ரஷ்ய நாட்டின் அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலின்"இறந்த அன்று மாலையில்"அவருக்காக ஒரு இரங்கல் கூட்டத்தை (மீட்டிங்) ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தாராம்.அப்படி அவர் உணர்ச்சிகரமாக வீராவேசமாக மைக்கில் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு துண்டு சீட்டை (அப்போதே துண்டு சீட்டு)கொண்டு வந்து கொடுத்தாராம். அதைப் படித்த கருணாநிதி கூட்டத்தினரை நோக்கி எனக்கு சற்று நேரத்திற்கு முன் மகன் பிறந்திருக்கின்ற செய்தி கிடைத்திருக்கிறது என்று சொன்னதும் உடனே உடன்பிறப்புகளின் ஆராவார கரகோஷம். அப்றம் கருணாநிதி அந்த மேடையிலேயே சொன்னாராம் எனக்கு மகன் பிறந்தால் அவனுக்கு பெரியாரை நினைவு கூற அய்யா என்ற எழுத்தையும், அண்ணாதுரையை நினைவாக துரை என்ற எழுத்தையும் சேர்த்து "அய்யாதுரை"என்று பெயர் வைக்கலாம் என நினைத்திருந்தேன்.ஆனால் இன்று இந்த ரஷ்ய அதிபரின் இறந்த நாளான இன்று இரங்கல் கூட்டம் நடக்கும் நேரத்தில் அவன் பிறந்ததால் அவனுக்கு அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயர் சூட்டுகிறேன் என உடன்பிறப்புகளின் கரவோசைகளுக்கிடையே அறிவித்தாராம்.இதில் வேடிக்கை என்னவென்றால் நம் விடியல் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த தேதி 1953ம் வருடம் மார்ச் மாதம் 1ம் தேதி.ஆனால் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் இறந்தது 1953 ஆண்டு மார்ச் 5 ம் தேதி.அதாவது ஸ்டாலின் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அவர் பெயரை சூட்டிவிட்டார் கருணாநிதி. எப்படியிருக்கு கதை நல்லாருக்கா? கருணாநிதி பேசாமல் இவருக்கு அய்யாதுரை என்ற பெயரை வைத்திருந்தால் இப்போது பாவம் விடியல் இவ்வளவு அவஸ்தை பட தேவையில்லை.
Rate this:
15-டிச-202206:46:56 IST Report Abuse
ஆரூர் ரங்அதே 1953 நேரத்தில் ஈவேரா வுக்கும் திமுக (கருணாநிதி) க்கும் மனஸ்தாபம்😶. கடுமையான ஆபாச வார்த்தை சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது பெரியாரின் அய்யா என்று பெயர் வைக்க திட்டமிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. வழக்கம் போல 🙃ரீல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X