லொடலொட பஸ்சால் நொந்துபோன டிரைவர்: கலெக்டர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் புகார்
லொடலொட பஸ்சால் நொந்துபோன டிரைவர்: கலெக்டர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் புகார்

லொடலொட பஸ்சால் நொந்துபோன டிரைவர்: கலெக்டர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் புகார்

Updated : டிச 15, 2022 | Added : டிச 15, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
திண்டுக்கல் : குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சேதமடைந்த அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் பயணிகள் திட்டியதால் மனம் நொந்து அதை கலெக்டர் அலுவலகம் கொண்டுவந்து, பின்னர் பணிமனையில் ஒப்படைத்தார். தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முருகேசன் 50. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குமுளி லோயர் கேம்ப் பணிமனை டிரைவராக உள்ள இவர் நேற்று குமுளியில் இருந்து
லொடலொட பஸ்சால் நொந்துபோன டிரைவர்: கலெக்டர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திண்டுக்கல் : குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சேதமடைந்த அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் பயணிகள் திட்டியதால் மனம் நொந்து அதை கலெக்டர் அலுவலகம் கொண்டுவந்து, பின்னர் பணிமனையில் ஒப்படைத்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முருகேசன் 50. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குமுளி லோயர் கேம்ப் பணிமனை டிரைவராக உள்ள இவர் நேற்று குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்ஸை ஓட்டி வந்தார். மழையால் பஸ் முழுதும் ஒழுகியது. பயணிகள் எரிச்சலடைந்து டிரைவரை வசை பாடினர். இதில் மனம் நொந்த முருகேசன் பயணிகளை திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் இறக்கிவிட்டு பஸ்சை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். கலெக்டர் இல்லாததால் அங்கிருந்த அதிகாரியிடம் மனு அளித்தார்.

அதில் ,''நான் 15 ஆண்டாக அரசு பஸ் டிரைவாக உள்ளேன். நான் ஓட்டி வந்த டி.என்.57 என்.1989 பஸ்சின் கூரை ஒழுகுகிறது. பக்க வாட்டு பகுதிகள், கண்ணாடிகள், டிரைவர் இருக்கை, ஸ்டியரிங் பிளை, மீட்டர் போர்டு, இன்ஜின் என அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. பயணிப்போரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. பஸ்சை பழுது நீக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் இந்த பஸ்சை சரி செய்து புதுப்பித்து தரும்படி வேண்டுகிறேன் ,''என குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின் அவர் பஸ்சுடன் திண்டுக்கல் வட்டார போக்குவரவத்து அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் பஸ்சின் நிலையை காட்டி விட்டு, திண்டுக்கல் தலைமை அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ்சை ஒப்படைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

seshadri - chennai,இந்தியா
20-டிச-202212:08:38 IST Report Abuse
seshadri இந்த வேணுகோபாலநை அந்த பஸ்ஸில் உட்கார வைத்து மழையில் திண்டுக்கல் டு குமுளி வரை போக சொல்லணும். வந்தே பாரத் ரயிலின் சிறப்பு பற்றி ஒன்றும் தெரியாமல் கமெண்ட் போடுகிறார். இவர்தான் சரியான இருநூறு ரூபாய் குவாட்டர் பிரியாணி உடன் பிறப்பு.
Rate this:
Cancel
baala - coimbatore,இந்தியா
17-டிச-202209:33:04 IST Report Abuse
baala thinnum enna solluvathu
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
17-டிச-202209:28:17 IST Report Abuse
N Annamalai இவரை பணியிடை நீக்கம் செய்ததாக தகவல் கூறப்படுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X