'உலகின் அடுத்த நிதி நெருக்கடி கிரிப்டோ கரன்சிகளால் தான் வரும்'
'உலகின் அடுத்த நிதி நெருக்கடி கிரிப்டோ கரன்சிகளால் தான் வரும்'

'உலகின் அடுத்த நிதி நெருக்கடி கிரிப்டோ கரன்சிகளால் தான் வரும்'

Added : டிச 22, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை: உலகின் அடுத்த நிதி நெருக்கடி என்பது, தனியார் 'கிரிப்டோ கரன்சி'களால் தான் வரும் என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறிஉள்ளார். மேலும் பணவீக்கத்தை எதிர்த்து போராட, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே, சிறப்பான ஒருங்கிணைந்த அணுகுமுறை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சக்திகாந்த தாஸ், மத்திய அரசும், ரிசர்வ்
'உலகின் அடுத்த நிதி நெருக்கடி கிரிப்டோ கரன்சிகளால் தான் வரும்'

மும்பை: உலகின் அடுத்த நிதி நெருக்கடி என்பது, தனியார் 'கிரிப்டோ கரன்சி'களால் தான் வரும் என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறிஉள்ளார். மேலும் பணவீக்கத்தை எதிர்த்து போராட, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே, சிறப்பான ஒருங்கிணைந்த அணுகுமுறை உள்ளதா

கவும் அவர் கூறியுள்ளார்.தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சக்திகாந்த தாஸ், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, பணவீக்கத்தை சமாளிக்க எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு கூறினார்.அவர் மேலும் கூறியுள்ளதாவது:


latest tamil news

பணவீக்கத்தை குறைக்க வட்டி விகிதங்கள், பணப்புழக்கம், பணவியல் கொள்கை ஆகியவற்றில் ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.அதே நேரம், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைப்பது, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மீதான வரிகளை குறைப்பது என, வினியோகப் பிரிவில் பல நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது.

இந்திய நிதித் துறை மிகவும் வலுவாக உள்ளது.



இந்த சாதனைக்கு, கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் நிதித் துறை நிறுவனங்கள் ஆகிய இரண்டும் முக்கிய காரணமாகும்.உலகின் அடுத்த நிதி நெருக்கடி, தனியார் கிரிப்டோ கரன்சிகளால் வரக்கூடும். 'பிட்காய்ன்' போன்றவற்றை தொடர்ந்து வளர விட்டால், இந்நிலை ஏற்படும்.மத்திய வங்கிகளின் 'டிஜிட்டல்' நாணயங்கள் தான் எதிர்கால நாணயங்களாக இருக்கும். இந்தியாவில் இதற்கான வெள்ளோட்டத்தை ரிசர்வ் வங்கி துவங்கி உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
22-டிச-202208:38:51 IST Report Abuse
Ramaraj P holding doge coin and shib inu coin is more after 3-5 years.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
22-டிச-202205:26:22 IST Report Abuse
g.s,rajan ஐயோ இப்பவே மக்களால் பண வீக்கம் மற்றும் விலை வாசி உயர்வை எதிர்த்து போராடவே முடியவில்லை, இன்னும் நிதி நெருக்கடி வந்தா மக்களால தாங்கவே முடியாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X