அண்ணாமலை பாதயாத்திரை ஏப்ரலுக்கு தள்ளி போனது ஏன்?

Updated : டிச 22, 2022 | Added : டிச 22, 2022 | கருத்துகள் (70) | |
Advertisement
சென்னை: பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் இறுதி தேர்வுகள் முடிந்த பின் மாணவர்களை சந்திக்கவே, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை, 2023 ஜனவரிக்கு பதில் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.வரும், 2024ல் நடக்கும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கன்னியாகுமரி மாவட்டத்தில், 'இந்திய
Annamalai, BJP, padayatra, postponed, April, அண்ணாமலை, பாதயாத்திரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

சென்னை: பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் இறுதி தேர்வுகள் முடிந்த பின் மாணவர்களை சந்திக்கவே, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை, 2023 ஜனவரிக்கு பதில் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


வரும், 2024ல் நடக்கும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கன்னியாகுமரி மாவட்டத்தில், 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் நடைபயணத்தை துவக்கி, பல மாநிலங்கள் வழியாக டில்லியை அடைய உள்ளார்.


தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் இருப்பதற்காக, தி.மு.க., அரசை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், ஜூலை 5ல் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.


latest tamil news

சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பேசிய அண்ணாமலை, 'வரும் டிச., 31க்குள் தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், ஜன., 1 முதல், கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோபாலபுரம் வரை, பா.ஜ.,வினர் பாதயாத்திரை செல்வர்' என்றார்.


இதையடுத்து, ஜனவரி முதல் பாதயாத்திரையை மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டார். அதில் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கல்லுாரி, பள்ளி மாணவர்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.


அந்த காலத்தில் பள்ளி, கல்லுாரிகளில் இறுதி தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராகி வருவர். இதனால், பாதயாத்திரையின்போது, அவர்கள் அதிகளவில் பங்கேற்பரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


'பாதயாத்திரையை ஏப்ரல் இறுதியில் துவங்கினால், கோடை விடுமுறையில் அதிக மாணவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியும்' என, அண்ணாமலையிடம் பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, பாதயாத்திரையை 2023 ஜனவரிக்கு பதில் ஏப்ரலில் நடத்த, அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (70)

23-டிச-202209:13:06 IST Report Abuse
பேசும் தமிழன் அண்ணாமலை அவர்கள் முன்பு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.. ஒவ்வொரு கிராமத்திலும் பிஜேபி கொடியை ஏற்ற வேண்டும்... இலவசம் எனும் போதையில் இருக்கும் தமிழக மக்களை தட்டி எழுப்ப வேண்டும்.. அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
22-டிச-202222:01:12 IST Report Abuse
G.Prabakaran வாட்ச் ரசீது தயாரிக்க சிறிது காலம் ஆகலாம். அதுவரை பதவியில் இருப்பாரா.
Rate this:
Cancel
Thirumoorthy - Madurai,இந்தியா
22-டிச-202218:41:50 IST Report Abuse
Thirumoorthy இப்படித்தான் எல் முருவன் அட்டை வேலை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி கூடி குடித்து கும்மாளம் போட்டு தோற்று இறுதியில் அமைச்சர் பதவி பெற்றுக்கொண்டது...அதுபோல் ஆட்டுக்குட்டிக்கும் ஏதாவது மாநிலத்தில் கவர்னர் பதவி கிடைக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X