‛‛உக்ரைன் வீழவில்லை'': அமெரிக்காவில் ஜெலன்ஸ்கி பேச்சு

Updated : டிச 22, 2022 | Added : டிச 22, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
வாஷிங்டன்: எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. கடந்த ஒன்பது மாதங்களாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.




latest tamil news


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. கடந்த ஒன்பது மாதங்களாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.



latest tamil news


போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து, அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி முதன்முறையாக அமெரிக்க பயணம் மேற்கொண்டார்.


போலந்தின் செமிசோ நகருக்கு ரயிலில் பயணித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அங்கிருந்து அமெரிக்கா சென்று வாஷிங்டனில் இன்று (டிச.,22) அதிபர் ஜோ பைடனை சந்தித்து போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைனுக்கு கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவ தளவாடங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.



latest tamil news



கண்ணியமான முறை:


அமெரிக்கா அதிரபர் ஜோ பைடன் பேசியவதாவது: சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் வளமான உக்ரைனின் தொலைநோக்கு பார்வை குறித்து நாங்கள் பகிர்ந்து கொண்டோம். இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.


கண்ணியமான முறையில் புடின் நடந்து கொண்டால் இது சாத்தியமாகும். ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனை தனித்துவிட மாட்டோம் என்றும் அந்நாட்டிற்கு ஆதரவாக நேட்டோ படைகள் துணை நிற்கும் . இவ்வாறு அவர் பேசினார்.



latest tamil news



சரணடையாது:


இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியவதாவது: நீங்கள் கொடுக்கும் நிதியுதவி வெறும் தானம் என்று நினைக்காதீர்கள் இது முதலீடு. இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது. எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. உயிருடன், ரஷ்யாவை உதைக்கிறது. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது.



ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது. அதிபர் பைடன் எங்களுக்கு துணை நிற்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. உக்ரைன் ஒருபோது ரஷ்யாவிடம் சரணடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

Milirvan - AKL,நியூ சிலாந்து
23-டிச-202209:33:24 IST Report Abuse
Milirvan பாய்ஸ் படத்தில் சித்தார்த் எனும் நடிகர் உதை வாங்கிக்கொண்டு ""வலிக்கலியே வலிக்கலியே"" என்று காதலி முன்பு சீன் போடுவதுதான் ஞாபகம் வருகிறது.. சுயஇறுமாப்பிற்காக மக்களை பணயம் வைத்த மூர்க்கன்..
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
22-டிச-202221:09:57 IST Report Abuse
jagan பேட்டை ரவுடி புட்டினுக்கு மரண அடி கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை. சோவியத் யூனியன் போல் ரஷ்யாவும் உடைக்கப்பட்டு வேண்டும்
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
22-டிச-202221:07:55 IST Report Abuse
rmr இவன் எல்லாம் ஒரு தலைவன், சினிமா நடிகனை தலைவன் ஆக்கினாள் நாடு என்னாகும் என்பதிற்கு இவன் உதாரணம், பேச்சு வார்த்தை செய்யாமல் போர் செய்து மக்களை அழிப்பதுதான் இவன் எண்ணம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X