‛‛பொதுமக்களின் வலி எங்களுக்கு புரிகிறது'': காங்., எம்.பி ராகுல்
‛‛பொதுமக்களின் வலி எங்களுக்கு புரிகிறது'': காங்., எம்.பி ராகுல்

‛‛பொதுமக்களின் வலி எங்களுக்கு புரிகிறது'': காங்., எம்.பி ராகுல்

Updated : டிச 22, 2022 | Added : டிச 22, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
சண்டிகர்: பொதுமக்களின் வலி எங்களுக்கு புரிகிறது, அதனால்தான் ₹ 500 க்கு காஸ் சிலிண்டர் மற்றும் இலவச சிகிச்சை உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறோம் காங்., எம்.பி ராகுல் கூறியுள்ளார்.தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் துவங்கிய ராகுலின், 'பாரத் ஜோடோ யாத்திரை' கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் வழியாக சென்று, தற்போது ராஜஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சண்டிகர்: பொதுமக்களின் வலி எங்களுக்கு புரிகிறது, அதனால்தான் ₹ 500 க்கு காஸ் சிலிண்டர் மற்றும் இலவச சிகிச்சை உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறோம் காங்., எம்.பி ராகுல் கூறியுள்ளார்.




latest tamil news


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் துவங்கிய ராகுலின், 'பாரத் ஜோடோ யாத்திரை' கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் வழியாக சென்று, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது.


கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் யாத்திரை நடைபெற்ற நிலையில் யாத்திரை நேற்று (டிச.,21) ஹரியானா மாநிலத்திற்குள் நுழைந்தது. ராஜஸ்தானில் இருந்து முன்டஹா எல்லை வழியாக யாத்திரை ஹரியானாவுக்குள் நுழைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று(டிச.,22) ஹரியானா மாநிலம் நூவில் மேற்கொண்டார்.


இதற்கிடையே காங்., எம்.பி ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டில்லியை நோக்கி வரும் இந்த மக்கள் கூட்டம் பணவீக்கம், வேலையின்மை மற்றும் வெறுப்புக்கு எதிரானது.


பொதுமக்களின் வலி எங்களுக்கு புரிகிறது, அதனால்தான் ₹ 500 க்கு காஸ் சிலிண்டர் மற்றும் இலவச சிகிச்சை உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறோம்.



latest tamil news


இன்று நாட்டின் 100 இளைஞர்களை எடுத்து கணக்கிட்டால், அதில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் தாண்டவமாடுகிறது. இதுதான் நீங்கள் சொன்ன வளர்ச்சியா?.


யாத்திரையை நிறுத்துங்கள் என்று எனக்கு கடிதம் எழுதினார்கள். இவை அனைத்தும் இந்த யாத்திரையை நிறுத்துவதற்கான சாக்குகள், அவர்கள் இந்தியாவின் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (26)

RK -  ( Posted via: Dinamalar Android App )
23-டிச-202206:53:59 IST Report Abuse
RK பப்பு பண்ணுற கூத்துலதான் பொது மக்கள் வலி தாங்க முடியல அய்யா...🤣🤣🤣
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
23-டிச-202203:14:27 IST Report Abuse
shyamnats பப்பு தினமும் ஒரு அறிக்கை விட வேண்டும். அப்பொழுதுதான் பிஜேபி வளர்ச்சி யடைய முடியும் . மக்களும் கான் கிராஸை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள். பொது மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்கிவிட்டு, வோட்டு அறுவடை செய்ய நினைக்கிறார்.
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
22-டிச-202222:33:14 IST Report Abuse
sankar ராஜாதான் மக்கள் தொகை எட்டு கோடி. வீட்டுக்கு நாலு பேர் என்றால் ரெண்டு கோடி பேர். எல்லோருக்கும் அனுருக்கு கொடுத்தால். மீதி ஐநூறு நாட்டம். ரெண்டு கோடி x 500 ஆயிரம் கோடி மாசம் ஆயிரம் கோடி என்றால் வருசத்துக்கு பன்னெண்டாயிரம் கோடி. கோவேர்ந்மேன்ட் திவால் ஆயிரும். உஜ்வலாவில் சிலிண்டர் பெற்றவர்களுக்கு மட்டும் என்றால். ஒரு பத்து லட்சம் பேர் என்றால் . மாசம் ஐம்பது கோடி வருசத்துக்கு அறுநூறு கோடி . மீதி ஒரு கொடியே தொண்ணுறு லட்சம் குடும்பம் ஒட்டு போடாது எப்புடி பார்த்தாலும் ராஜஸ்தான் காலி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X