வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லையெனில் வரும் 2024 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு பெரும் இழப்பு ஏற்படும்' என, கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமியிடம் கூறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
உட்கட்சி மோதலால், அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. '2024 லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த வேண்டுமானால் அ.தி.மு.க., ஒரே கட்சியாக ஒன்றுபட்டு இருக்க வேண்டும்' என பா.ஜ., மேலிடம் வலியுறுத்தி வருகிறது.
'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லாத நிலையில்அ.தி.மு.க., பிளவுபட்டிருப்பது, தி.மு.க.,வுக்கு சாதகமாகி விடும்' என அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் எடுத்துக் கூறியும் தினகரன், பன்னீர்செல்வத்துடன் இணைய பழனிசாமி மறுத்து வருகிறார்.
இப்படி அ.தி.மு.க., -- பா.ஜ., இடையே முரண்கள் ஏற்பட்டுள்ள நிலையில் '2019 லோக்சபா 2021 சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுகள் முழுமையாக தி.மு.க.,வுக்கு சென்று விட்டன.
'இதுவே தோல்விக்கு காரணம். எனவே, பா.ஜ.,வுடன் கூட்டணி வேண்டாம்' என கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பழனிசாமியிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 17-ல் நெய்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 'பா.ஜ., அரசு சொல்லும் பணிகளை தன் தலையில் வைத்து தி.மு.க., அரசு செய்கிறது.
![]()
|
அதற்கு பதிலளித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை 'அ.தி.மு.க.,வின் மூன்றாம் கட்ட தலைவர்கள் பேச்சுக்கு பதிலளிக்க விரும்பவில்லை' என, காட்டமாக கூறினார்.
முனுசாமி, ஜெயகுமார் போன்றவர்களும் அவ்வப்போது பா.ஜ.,வுக்கு எதிராக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பழனிசாமியை சந்தித்த, நீலகிரி, கோவை திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் சி.வி.சண்முகத்தின் பேச்சு பா.ஜ., கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ள தாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலம் தான் அ.தி.மு.க.,வை காப்பாற்றியது. இதற்கு, பா.ஜ., கூட்டணி முக்கிய காரணம்.
நீலகிரி, கோவை, திருப்பூரில், பா.ஜ.,வுக்கு இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதம் உள்ளது.
கொங்கு மண்டலத்தின் மற்ற பகுதிகளில், பா.ஜ.,வுக்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ளது. அதுமட்டுல்லாது கொங்கு மண்டலம் முழுதும் பிரதமர் மோடிக்கு பெரும் செல்வாக்கு உள்ளது.
எனவே பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லாவிட்டால், வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
பன்னீர்செல்வம் தயவு இல்லாவிட்டால் தென் மாவட்டங்களிலும் வெற்றி பெறுவது கடினம்.
பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்றால், அ.தி.மு.க., ஒன்றிய, கிளை நிர்வாகிகளில் பலர் பா.ஜ.,வுக்கு சென்று விடுவர். எனவே, எச்சரிக்கையுடன் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு கொங்கு மண்டல நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
'எதுவாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் முடிவெடுத்து கொள்ளலாம். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது' என அவர்களை பழனிசாமி சமாதானப் படுத்தியதாக தெரிகிறது.