புகார் சொல்பவர்களை மிரட்டும் நகராட்சி பெண் அதிகாரி

Updated : டிச 27, 2022 | Added : டிச 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
''வாரும் ராஜமார்த்தாண்டன்... சூடா சுக்கு காபி குடியும்...'' என, நண்பரை வரவேற்ற அண்ணாச்சியே, ''புகார் சொல்றவங்களை அதிகாரி மிரட்டுதாங்க வே...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''கிருஷ்ணகிரி நகராட்சி பெண் அதிகாரி, நகர்வலமே போறதில்லைன்னு, ஆளுங்கட்சி கவுன்சிலர்களே அலுத்துக்கிடுதாவ... சமீபத்துல, 12வது வார்டு வழியா போன அதிகாரி
Female municipal officer intimidates complainants   புகார் சொல்பவர்களை மிரட்டும் நகராட்சி பெண் அதிகாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


''வாரும் ராஜமார்த்தாண்டன்... சூடா சுக்கு காபி குடியும்...'' என, நண்பரை வரவேற்ற அண்ணாச்சியே, ''புகார் சொல்றவங்களை அதிகாரி மிரட்டுதாங்க வே...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கிருஷ்ணகிரி நகராட்சி பெண் அதிகாரி, நகர்வலமே போறதில்லைன்னு, ஆளுங்கட்சி கவுன்சிலர்களே அலுத்துக்கிடுதாவ... சமீபத்துல, 12வது வார்டு வழியா போன அதிகாரி காரை நிறுத்தி, 'சாக்கடை கால்வாயில குப்பை தேங்கி கிடக்கு பாருங்க'ன்னு ஒரு பெண் புகார் சொன்னாங்க வே...


latest tamil news


''உடனே கோபமான அதிகாரி, 'நீங்களே குப்பையை போட்டுட்டு, எங்களை அள்ளச் சொல்றீங்களா'ன்னு கேட்டிருக்காங்க... அந்த பெண்ணும் விடாம, 'கால்வாயில காலி மது பாட்டில் நிறைய கிடக்குது... இதையும் நாங்க தான் போட்டோமா'ன்னு கேட்டிருக்காங்க வே...

''பெண் அதிகாரி, 'உங்கள் கடையே, கால்வாய் மேல தான் இருக்கு... முதல்ல உங்களுக்கு தான் அபராதம் போடணும்'னு மிரட்டிட்டு போயிட்டாங்க வே... இந்த மாதிரி யார் புகார் சொன்னாலும், அவங்களை மிரட்டி அனுப்புறதே அதிகாரிக்கு வழக்கமா போயிட்டு வே...'' என்றார், அண்ணாச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Lion Drsekar - Chennai ,இந்தியா
27-டிச-202209:38:54 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போல் இருக்கிறது . எல்லா புகழும் ...? வாழ்க ஜனநாயகம் வந்தே மாதரம்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-டிச-202209:22:38 IST Report Abuse
NicoleThomson அந்த அதிகாரி கேட்டதில் என்ன தப்பு? கேள்வி கேட்ட பெண் சுயமாக குப்பை போடாமல் இருந்திருந்தா கேள்வி கேட்கும் தகுதி வரும், கால்வாய் மீது கடை வைத்த பெண் அது தப்பு என்பது கூட அறியாமல் இருப்பாளா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X