பா.ஜ., உடன் கூட்டணி: அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எதிர்ப்பா?

Updated : டிச 27, 2022 | Added : டிச 27, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வரக்கூடிய லோக்சபா
ADMK, BJP, Alliance, Palanisamy, OPS, Natham Vishwanathan, O Panneerselvam, அதிமுக, மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பழனிசாமி, பாஜக, கூட்டணி, எதிர்ப்பு, ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், பன்னீர்செல்வம், போலி, அரசியல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வரக்கூடிய லோக்சபா தேர்தல் மற்றும் தேர்தலுக்கான கூட்டணி, கட்சி தொடர்பான வழக்கு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.


கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ‛பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். அதுபோல் அரசியலில் போலியானவர் ஓபிஎஸ். கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும்' என்றார்.



அதேபோல் அதிமுக.,வில் எந்த சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது என மாவட்ட செயலாளர்கள் ஒருமித்த குரல் எழுப்பினர். பின்னர் கூட்டணி தொடர்பான ஆலோசனையின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:


திமுக.,வின் ‛பி டீம்' ஆக ஓபிஎஸ் செயல்படுகிறார். அவருடன் இணைந்து செயல்படுபவர்கள் அனைவரும் துரோகிகள். அதிமுக சரியான பாதையில் பயணிக்கிறது. மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்கும் கட்சியாக அதிமுக தொடர்ந்து இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.



latest tamil news

மேலும், ‛அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமைக்கப்படும்' எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, பார்லிமென்ட் தேர்தலுக்கான பணிகளை துவங்கிடுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.


‛பாஜ.,வுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் ஓட்டளிக்க மாட்டார்கள். பா.ஜ., உடன் கூட்டணி அமைத்தால் அதிமுக.,விற்கே இழப்பு அதிகம். எனவே பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டாம்.' என சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தாக தகவல் வெளியானது.




பா.ஜ., கட்டுப்படுத்தவில்லை


latest tamil news

அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ., கூட்டணிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரத்தில் கொங்கு மண்டல நிர்வாகிகள் சிலர் பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பேசிய பழனிசாமி, ‛‛அதிமுக.,வை பா.ஜ., கட்டுப்படுத்தவில்லை.


100 சதவீதம் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என எப்போதும் வற்புறுத்தியது இல்லை. அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜ., தலையிடுவதில்லை. எனவே பா.ஜ., குறித்து யாரும் அவதூறாக பேச வேண்டாம்'' நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.



'அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை' : ஜெயக்குமார்


அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சசிகலா, பன்னீர் செல்வம், தினகரன் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.


உட்கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனை இல்லாத ஒரு விஷயம் குறித்து நாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. பார்லி., தேர்தல் குறித்த பணிகள் பற்றி ஆலோசனை நடத்தினோம். திமுக அரசு மீது மக்கள் கடும் கோபம்.


எங்கள் நோக்கம் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டும் தான். அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை; அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


ஒரு லட்சம் ரூபாய் திருட்டு

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், தென்காசி ஒன்றிய அதிமுக துணைச் செயலாளர் உச்சிமாகாளியிடம் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (50)

28-டிச-202205:48:05 IST Report Abuse
 ravi   chennai 13 சதவிகித சிறுபான்மையினர் ஓட்டு திமுக க்கு கிடைத்து விடுகிறது மீதி 87 சதவீதம் இந்து ஓட்டு பிரிந்து விடுகிறது சிறுபான்மை மக்கள் இந்துக்கள் க்கு ஓட்டு போட மாட்டாங்க ஆனால் இந்துக்கள் சிறுபான்மையினர் மக்களுக்கு ஓட்டு போடுங்க
Rate this:
Cancel
Unmai vilambi - Chennai,இந்தியா
28-டிச-202201:00:57 IST Report Abuse
Unmai vilambi திமுக அதிமுக பிஜேபி தனித்தனியாக நின்றால் திமுக பிஜேபி அதிமுக மூன்றாம் இடத்தில் சென்று விடும் அதிமுகவோட முதலீடு திமுக எதிர்ப்போட்டு தான் அதுல பெரும் பகுதி இப்ப பிஜேபிக்கு சென்று விட்டது
Rate this:
Cancel
27-டிச-202223:00:05 IST Report Abuse
அப்புசாமி 20 சீட்டுதான் அதிமுக வுக்கு குடுப்பாளாம். பா.ஜ அந்த அளவுக்கு வளர்ந்திடுச்சாம். ரத்தத்தின் ரத்தங்களுக்கு உதறல் எடுக்காதா? அதான் உதார் உட்டுப் பாக்குறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X