மிஸ்டு கால் மூலம் பணம் பறிக்கும் "சிம் ஸ்வாப் ஹேக்கிங்.."!
மிஸ்டு கால் மூலம் பணம் பறிக்கும் "சிம் ஸ்வாப் ஹேக்கிங்.."!

மிஸ்டு கால் மூலம் பணம் பறிக்கும் "சிம் ஸ்வாப் ஹேக்கிங்.."!

Updated : டிச 27, 2022 | Added : டிச 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், மிஸ்டு கால் மூலம் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் 'சிம் ஸ்வாப்' ஹேக்கிங் மோசடி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தெற்கு டில்லியில் தொழிலதிபர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 லட்சம் திருடப்பட்டது காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அவர் தன்னுடைய வங்கி
Sim swap hacking to extort money through missed call..!  மிஸ்டு கால் மூலம் பணம் பறிக்கும் "சிம் ஸ்வாப் ஹேக்கிங்.."!


தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், மிஸ்டு கால் மூலம் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் 'சிம் ஸ்வாப்' ஹேக்கிங் மோசடி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.



சமீபத்தில் தெற்கு டில்லியில் தொழிலதிபர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 லட்சம் திருடப்பட்டது காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அவர் தன்னுடைய வங்கி கணக்கு எண், ஓ.டி.பி போன்ற எந்த தகவலையும் யாரிடமும் பகிரவில்லை. இருந்தும் இந்த மோசடி அரங்கேறி உள்ளது.


சிம் ஸ்வாப் மோசடி எப்படி நடக்கிறது, அதிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்துப் பார்ப்போம்.


முதலில் ஸ்கேமர்கள் எனப்படும் இணைய திருடர்கள், நம்முடைய மொபைல் எண்ணை அறிந்திருப்பார்கள். மேலும் அந்த எண்ணுக்கு ஏதேனும் போலியான இ மெயில் அல்லது குறுஞ்செய்தியை அனுப்புவார்கள். சில நேரங்களில் ஏதேனும் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி போல தகவல்களை சேகரிப்பர். இது மட்டுமல்லாது, சமூக வலைதளங்களில் நம் பதிவிடும் தகவல்களையும், அவர்கள் சேகரித்து வைத்து கொள்வர்.


latest tamil news


அவர்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் கிடைத்தவுடன், நாம் பயன்படுத்தும் மொபைல் எண்ணின் தொலை தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனத்தை அணுகி, அவர்களிடம் தங்களுடைய மொபைல் திருட்டுப் போய்விட்டதாகவோ அல்லது சிம் சேதமடைந்து விட்டதாகவோ பதிவு செய்வார்கள். பின்பு அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்து விட்டால், அதேபோன்று வேறொரு சிம் அந்த எண்ணுக்கே கொடுத்து விடுவார்கள்.

இந்த விஷயம் நமக்குத் தெரியாமல் இருப்பதற்காக நமக்கு பலமுறை போன் செய்து போனை சுவிட்ச் ஆப் செய்ய வைப்பர். பின்பு அந்த சிம் உடன் இணைக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து விடுவர். இதுபோன்று போன், சிம் ஸ்வாப் மூலம் ஹேக் செய்யப்பட்டு விட்டதா என்று தெரிந்து கொள்ள நமக்கு சில வழிகள், நம் மொபைல் போனில் சிக்னல் நீண்ட நேரம் துண்டிக்கப்படலாம்.


மேலும் சந்தேகத்திற்குரிய நோட்டிபிகேஷன்கள், தெரியாத நபர்களிடமிருந்து குறுஞ்செய்தி வரலாம். முன்னரே வைத்திருந்த வங்கி கணக்குகளின் கடவுச்சொற்கள் தானாகவே செயலிழந்து இருக்கும். இதுபோன்ற சூழலில், நாம் உடனே நம்முடைய தொலைதொடர்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு நம்முடைய எல்லா சிம்களையும் முடக்கச் செய்து, புது சிம்மை அதே நம்பரில் வாங்கிக் கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

27-டிச-202222:55:56 IST Report Abuse
அப்புசாமி போனை போனா உபயோகப்படுத்துங்க. சோசியல் மீடியா புண்ணாக்கெல்லாம் வேறு நம்பரிலிருந்து செய்யுங்க. உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ள போனிலிருந்து வேறு எதுவும் செய்யாதீங்க.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-டிச-202221:17:55 IST Report Abuse
NicoleThomson எவ்வளவு விஷயம் யோசிக்கிறார்கள் முகநூல் இன்ஸ்டாங்க்ராம் விடுத்து வேறு யார் நமது விவரங்களை தெரிவிப்பார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X