மூன்றே மாதத்தில் புதிய வேலையில் சேர்ந்த ஐ.டி., ஊழியர்கள்..!
மூன்றே மாதத்தில் புதிய வேலையில் சேர்ந்த ஐ.டி., ஊழியர்கள்..!

மூன்றே மாதத்தில் புதிய வேலையில் சேர்ந்த ஐ.டி., ஊழியர்கள்..!

Updated : டிச 30, 2022 | Added : டிச 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
உலகளாவிய பொருளாதார மந்த நிலை அச்சம், நிறுவனங்களின் செலவு குறைப்பு நடவடிக்கை போன்றவை காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்ட ஐ.டி., ஊழியர்கள், வேலை தேட துவங்கிய அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய பணியிடங்களில் சேர்ந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் வால்ஸ்டீரிட் ஜர்னல், மனிதவள மேம்பாட்டு நிறுவனமான ஜிப் ரெக்கூருட்டர் (ZipRecruiter ) சர்வேயை குறிப்பிட்டு,
IT employees who joined new jobs in three months..!  மூன்றே மாதத்தில் புதிய வேலையில் சேர்ந்த ஐ.டி., ஊழியர்கள்..!


உலகளாவிய பொருளாதார மந்த நிலை அச்சம், நிறுவனங்களின் செலவு குறைப்பு நடவடிக்கை போன்றவை காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்ட ஐ.டி., ஊழியர்கள், வேலை தேட துவங்கிய அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய பணியிடங்களில் சேர்ந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


அமெரிக்காவின் வால்ஸ்டீரிட் ஜர்னல், மனிதவள மேம்பாட்டு நிறுவனமான ஜிப் ரெக்கூருட்டர் (ZipRecruiter ) சர்வேயை குறிப்பிட்டு, தொழில்நுட்ப துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் கிட்டத்தட்ட 79 சதவீதம் பேர், 3 மாதங்களுக்குள் புதிய வேலையில் சேர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. அதேநேரம் ஐ.டி., ஊழியர்கள், ஏற்கனவே பெற்ற ஊதியத்தை விட அதிகமாக அல்லது குறைவாக பெற்றார்களா என்பதை பற்றி அதில் குறிப்பிடவில்லை..


மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது: -


2008ம் ஆண்டு ஏற்பட்ட மந்தநிலையை போன்று, உலக பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடுமென்ற அச்சம் காரணமாக முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை கையில் எடுத்தன. கூகுள், அமேசான் போன்று பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023ம் ஆண்டிலும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை தொடருமென அறிவித்துள்ளனர்.


latest tamil news

2022ம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 91 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் வேலையை இழந்தனர். இந்தியாவில் 17,000க்கும் மேற்பட்டோர் வேலையை இழந்தனர். பணிநீக்கம் செய்யப்பட்ட 10ல் 4 ஐ.டி ஊழியர்கள், வேலையை தேட துவங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே புதிய வேலையை பெற்றுள்ளனர். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் வேலை கிடைத்த ஐ.டி., ஊழியர்களில் சுமார் 5 சதவீதம் பேர் மட்டும், வேலைக்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


ஜிப் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஜூலியா பொல்லாக் கூறுகையில்,'முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம், புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்துதல், செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என தொடர்ந்த போதும், பெரும்பாலான ஊழியர்கள் விரைவாக மறுபடியும் வேலைக்கு சேர்ந்தது முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். மேலும், ஐ.டி., மட்டுமின்றி, பொழுதுப்போக்கு, போக்குவரத்து, டெலிவரி, உற்பத்தி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும், விரைவாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (1)

g.s,rajan - chennai ,இந்தியா
30-டிச-202216:50:21 IST Report Abuse
g.s,rajan நல்லது ,இது போன்று உற்பத்தித் துறைகளிலும் பலருக்கு வேலை கிடைத்தால் நன்று.சேவைத் துறையில் வேலை வாய்ப்புக்கள் நிரந்தரமாக இருக்க வாய்ப்பு இல்லை.நிரந்தரமற்ற சூழலில் தான் பலர் வேலை பார்க்க வேண்டி உள்ளது .என்ன செய்வது ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X