மத்திய அரசால் தமிழகத்திற்கு ரூ.1,000 கோடி மிச்சம்: அண்ணாமலை

Updated : டிச 31, 2022 | Added : டிச 31, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை--'மத்திய பா.ஜ., அரசின் அறிவிப்பால், 2023ல் தமிழக அரசு, 1,000 கோடி ரூபாய் வரை சேமிக்க உள்ளதால், தேர்தல் வாக்குறுதிகளை, ஜனவரி முதல் நிறைவேற்ற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவரது அறிக்கை: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் 5 கிலோ அரிசியை, கிலோ 3 ரூபாய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

சென்னை--'மத்திய பா.ஜ., அரசின் அறிவிப்பால், 2023ல் தமிழக அரசு, 1,000 கோடி ரூபாய் வரை சேமிக்க உள்ளதால், தேர்தல் வாக்குறுதிகளை, ஜனவரி முதல் நிறைவேற்ற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



latest tamil news


அவரது அறிக்கை:


தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் 5 கிலோ அரிசியை, கிலோ 3 ரூபாய் விலையில், மாநில அரசுக்கு வழங்குகிறது.

உணவு பாதுகாப்பு சட்டத்தினால், தமிழகத்தில் 3.60 கோடி பேர் பயன் பெறுகின்றனர்.

தமிழகத்திற்கு, 2021 -- 22ல் மானிய விலையில், 294 கோடி கிலோ உணவு தானியங்களையும்; நடப்பு நிதியாண்டில் நவம்பர் வரை, 183 கோடி கிலோ தானியங்களையும், மத்திய பா.ஜ., அரசு வழங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது, மத்திய அரசு 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை, 2 லட்சம் கோடி ரூபாய் செலவில், அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


latest tamil news


மத்திய பா.ஜ., அரசின் அறிவிப்பால், 2023ல் தமிழக அரசு, 1,000 கோடி ரூபாய் வரை சேமிக்க உள்ளது.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், 2023 ஜனவரி முதல் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும், வீட்டு சமையல் காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியத்தையும், தி.மு.க., அரசு வழங்கி, தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

sridhar - Dar Es Salaam ,தான்சானியா
31-டிச-202215:50:24 IST Report Abuse
sridhar ஒன்னும் பண்ண முடியாது
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
31-டிச-202211:54:33 IST Report Abuse
M  Ramachandran மிச்சம் என்றால் அது பல பேருக்கு லாபம்
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
31-டிச-202211:04:31 IST Report Abuse
venugopal s மாநில அரசின் நிதி ஆதாரம்,நிதி மேலாண்மை எல்லாம் எங்ககளுக்கு தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X