‛அரசியல்வாதிகள் இதை தான் செய்வோம்..'; உண்மையை ஒப்புக்கொண்டார் அமைச்சர்

Updated : டிச 31, 2022 | Added : டிச 31, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
கிருஷ்ணகிரி : ''நாங்கள் அரசியல்வாதிகள். தேர்லுக்கு முன் பார்ப்போரை எல்லாம் கையெடுத்து கும்பிடுவோம். வெற்றி பெற்ற பின் கண்ணே தெரியாது,'' என, கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி பேசினார்.கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் மற்றும் பயனாளிகள் உள்பட, 6,675 பேருக்கு, 1.29 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று
Lets bow before the election; You wont see when you win! The minister admitted the truth  ‛அரசியல்வாதிகள் இதை தான் செய்வோம்..'; உண்மையை ஒப்புக்கொண்டார் அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கிருஷ்ணகிரி : ''நாங்கள் அரசியல்வாதிகள். தேர்லுக்கு முன் பார்ப்போரை எல்லாம் கையெடுத்து கும்பிடுவோம். வெற்றி பெற்ற பின் கண்ணே தெரியாது,'' என, கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி பேசினார்.


கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் மற்றும் பயனாளிகள் உள்பட, 6,675 பேருக்கு, 1.29 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார்.


நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி பேசியதாவது: நாங்கள் எல்லாம் அரசியல்வாதிகள். தேர்தலுக்கு ஒரு மாதம் முன், பார்ப்பவர்களை எல்லாம் கும்பிடுவோம். எங்கள் வேலுார், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன், தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, அங்கு நின்ற, 200 பேரை பார்த்து கும்பிட்டு ஓட்டு கேட்டார். ஒரே இடத்தில், 200 ஓட்டை வாங்கி விடலாம் என்று அவர் நினைத்தார். அவர்களோ, 'எங்கள் ஊர் சித்துார்; ஒரு வேலையாக இங்கு வந்தோம்' என கூறியுள்ளனர்.


latest tamil news

அதுபோல, குழந்தைகள் அழும்போது சாக்லெட் கொடுப்பது போல, மக்களுக்கு என்ன தேவையோ அப்படி செய்வோம். துாக்கத்தில் மனைவி கை பட்டாலும், அவர்களையும் கும்பிடுவோம். ஆனால், வெற்றி பெற்றவுடன், அரசியல்வாதிகளுக்கு கண்ணே தெரியாது.


எனவே, மக்களாகிய நீங்கள், உங்களுக்கு யார் நல்லது செய்வர் என யோசித்து ஓட்டு போட வேண்டும். அப்போது தான், அரசியல்வாதிகளுக்கு பயம் வரும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் வரும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

M Ramachandran - Chennai,இந்தியா
01-ஜன-202310:23:00 IST Report Abuse
M  Ramachandran என்ன இது அவர்கள் உணமைய பேச ஆரம்பித்து விட்டார்களா? இவர்களுக்கெல்லாம் கூடிய விரைவில் கல்த்தாவா?
Rate this:
Cancel
Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
31-டிச-202221:46:29 IST Report Abuse
Venkatasubramanian krishnamurthy சொல்லிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாது என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார். அடுத்த தேர்தலிலாவது யோசித்து ஓட்டுப் போடுங்கள் மக்களே. காந்தி சொன்னா கேட்டுக்கணும்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
31-டிச-202219:34:22 IST Report Abuse
spr டீக்கடை பெஞ்சில் இருந்தவர் சொன்னார் "என்ன தெனாவட்டு இருந்தா இப்படிப் பேசுவான். செருப்பாலே அடிச்சாலும் நமக்குத்தான் ஒட்டுப் போடுவாங்கற நெனப்பு. எல்லாம் நம்ம புத்திய சொல்லணும்"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X